Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
இந்தியா: வலதுசாரி பிரசார யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். எல்விஷ் யாதவ் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்துகளை ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில், பாம்பு விஷம் மற்றும் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக நொய்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, எல்விஷின் கூட்டாளிகள் ராகுல், திடு நாத், ஜெயகரன் நாராயண், ரவி நாத் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 9 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக தகவல் வெளியாகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எல்விஷின் பிறந்த நாள் விழா பிரமாண்டமான நடைபெற்ற நிலையில், இதில், ஹரியானா முதல்வர் மனோகர் கட்டா நேரில் கலந்துகொண்டு வாழ்த்த்து கூறியதாக தகவல் வெளியாகும் நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.